கன்பராவில் காணாமல்போன தமிழ்ச்சிறுவனின் சடலம் மீட்பு!

BeFunky-collage (12).jpg

Pranav Vivekanandan Credit: AAP / SUPPLIED/PR IMAGE

கன்பரா Gungahlin-இலுள்ள Yerrabi குளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 8 வயது தமிழ்ச்சிறுவன் பிரணவ் விவேகானந்தன், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இச்சிறுவனின் தாய் மற்றும் சகோதரனின் சடலங்கள் நேற்றுக்காலை Yerrabi குளத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தநிலையில், பிரணவின் உடலும் அதே குளத்திலிருந்து பாரிய தேடுதலுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை Yerrabi குளத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகன்களின் மரணம் தொடர்பில் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தகவல்கள் பெறப்படுவதாகவும், இம்மரணங்களின் பின்னணி இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் குறித்த மரணங்களுடன் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மூவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்ட Yerrabi குளம் அமைந்திருப்பது கன்பரா வடக்கிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமென்பது குறிப்பிடத்தக்கது.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at 
 and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share
Published 6 November 2022 6:32pm
Updated 6 November 2022 6:50pm
Source: SBS

Share this with family and friends