கன்பராவில் தமிழ்ச்சிறுவனைக் காணவில்லை! தாயும் சகோதரனும் குளத்திலிருந்து சடலமாக மீட்பு!!

BeFunky-collage.jpg

Police divers prepare to search an area at Yerrabi Pond, Gungahlin in Canberra. Inset:Pranav Vivekananthan Credit: AAP & ACT Police

கன்பரா Gungahlin-இலுள்ள Yerrabi குளத்தில் தாய் மற்றும் மகன் ஒருவரது சடலங்கள் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுவனைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மற்றொரு மகன் என நம்பப்படுகிறது.

காணாமல்போன 8 வயதுச் சிறுவனின் பெயர் பிரணவ் விவேகானந்தன் எனவும், இவர் Yerrabi குளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும், இவரை யாரேனும் பார்த்திருந்தால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இச்சிறுவன் orange நிற T-Shirt மற்றும் இள நிறத்தில் காற்சட்டை அணிந்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை Yerrabi குளத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் ஆகியோரின் மரணம் தொடர்பில் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தகவல்கள் பெறப்படுவதாகவும், இம்மரணங்களின் பின்னணி இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்ட Yerrabi குளம் அமைந்திருப்பது கன்பரா வடக்கிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு ACT பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at  and on 1300 22 4636. 
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share
Published 5 November 2022 8:51pm
Updated 5 November 2022 9:32pm
Source: SBS

Share this with family and friends