NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

COVID-19

Omicron variant concerns Source: AAP

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான  ஏழாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். இந்நபர் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்செய்திருக்கவில்லை எனவும், ஆனால் குறித்த நபர் டோஹாவிலிருந்து சிட்னி வந்தபோது, விமானத்தில்வைத்து நோய் பரவியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
  • புதிய Omicron திரிபு உலகின் 23 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள பின்னணியில், இதற்கெதிராக முழுமையான தடைகளை நடைமுறைப்படுத்துவது பரவலைத் தடுக்காது எனவும், மாறாக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே அது ஏற்படுத்தும் எனவும்,  உலக சுகாதார அமைப்பின் Director-General Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.
  • தொற்றுநோய் தாக்கத்திற்கு இலகுவில் ஆட்படக்கூடியவர்கள், தமது பயணத்திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Omicron திரிபு ஏற்கனவே சமூகத்தில் பரவியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விக்டோரியா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  விக்டோரியாவில் இதுவரை Omicron தொற்றுள்ள எவரும் இனங்காணப்படவில்லை. 
  • விக்டோரியாவில் கோவிட்  தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வாக உள்ளமை தொடர்பில் அதிக முக்கியத்துவமளிக்கத் தேவையில்லை என Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
  • Gold Coast-இல் நேற்றையதினம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தபட்ட நபர்,  Black Friday sales இடம்பெற்ற அன்று நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,419 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 10  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 271 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 8 பேருக்கும்  NT- இல் புதிதாக ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 2 December 2021 3:22pm
Updated 2 December 2021 3:27pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends