ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 30 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 6ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW Ambulances park in the receiving bay for the Emergency Department at the Liverpool Hospital in Sydney.

NSW Ambulances park in the receiving bay for the Emergency Department at the Liverpool Hospital in Sydney. (file) Source: AAP Image/Bianca De Marchi

ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன.

NSW மாநிலத்தில் 11,309 பேருக்கு கோவிட் தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 80 சதவீதமானோர் மூன்று சுற்று கோவிட் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

1 ஜனவரி 2020 முதல் 31 டிசம்பர் 2021 வரையான காலப்பகுதியில் 14.9 மில்லியன் அதிகப்படியான இறப்புகள் பதிவானதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிகப்படியான இறப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட் தொற்றுநோயுடன் தொடர்புடையவை என குறிப்பிடப்படுகிறது.

அரிதான இரத்த உறைதல் ஆபத்து காரணமாக, பெரியவர்களுக்கு Johnson & Johnson- இன் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதை அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா இந்த தடுப்பூசிக்கு ஜூன் 2021 இல் தற்காலிகமாக ஒப்புதல் அளித்திருந்தபோதிலும், தற்போதைய தடுப்பூசி திட்டத்தில் இது உட்படுத்தப்படவில்லை

AstraZeneca, Pfizer, Moderna மற்றும் Novavax ஆகியவை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக உள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  10,995 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,305 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1,107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக  381 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக  7,040 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர். 

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 9,328 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,874 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 

ACT- இல் புதிதாக 1,053 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 6 May 2022 3:59pm


Share this with family and friends