ஆஸ்திரேலியா வரும் சில பிரிவினர் இன்று முதல் விசா கட்டணத்தை திரும்பப் பெறலாம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 19ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People wearing PPE arriving at Sydney International Airport in Sydney.

People wearing PPE arriving at Sydney International Airport in Sydney. Source: AAP

சர்வதேச மாணவர்கள் மற்றும் Working Holiday Maker விசா உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்கள் மற்றும் Working Holiday Makers-இன் விசா விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.

சர்வதேச மாணவர்கள் சுமார் 150,000 பேரும், Working Holiday Maker விசா வைத்திருக்கும் சுமார் 23,500 பேரும் இன்னமும் வெளிநாடுகளிலேயே இருக்கின்ற பின்னணியில், இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கும்வகையில் அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கான தற்போதைய விசா விண்ணப்பக் கட்டணம் 630 டொலர்களாகும். மற்றும் Working Holiday Makers-க்கான விசா விண்ணப்பக் கட்டணம் 495 டொலர்களாக காணப்படுகின்றது.

இன்றிலிருந்து அடுத்த 8 வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் சர்வதேச மாணவர்கள் தமது விசா விண்ணப்பக் கட்டணத்தை மீளப் பெறலாம்.

அதேபோன்று இன்றிலிருந்து அடுத்த 12 வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் Working Holiday Makers தமது விசா விண்ணப்பக் கட்டணத்தை மீளப் பெறலாம். 

Omicron பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க உதவும்வகையில் பிரதமர்  Scott Morrison இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

  • NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பான 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  32,297 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 32 பேர் மரணமடைந்தனர். 
  • NSW மாநிலத்தில் 2,863 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 217 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு முன்பாக இரண்டாவது சுற்று கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், தங்களுக்கான booster தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று முதல்  பதிவு செய்யலாம் என Premier Dominic Perrottet  அறிவித்துள்ளார்.
  • விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 20,769 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18  பேர்  மரணமடைந்தனர். 
  • டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,185 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 19,932 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  11 பேர் மரணமடைந்தனர். 
  • குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற வழக்கமான நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து, வைரஸ்களின் புதிய திரிபுகளும் ஏற்படுவதற்கு  வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Paul Kelly  கூறியுள்ளார்.
  • எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல், முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை ரத்து செய்வதாக குயின்ஸ்லாந்து மாநிலம் அறிவித்துள்ளது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 19 January 2022 3:05pm
Updated 19 January 2022 3:20pm


Share this with family and friends