விக்டோரியாவில் கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 27ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People cross Bourke Street Mall in Melbourne, Sunday, March 20, 2022. (AAP Image/Diego Fedele) NO ARCHIVING

People cross Bourke Street Mall in Melbourne. (file) Source: AAP Image/Diego Fedele

நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 39 இறப்புகள் பதிவாகியுள்ளன.

விக்டோரியாவில் 571 பேர் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஏப்ரல் 4ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களில் முதன்முறையாக 10,000க்கும் குறைவான புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 34 பேர் கோவிட் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஏப்ரல் 4 க்குப் பிறகு பதிவான குறைந்தளவு எண்ணிக்கையாகும்.

NSW மாநிலத்தில் PCR சோதனை செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் 7.1 வீத சரிவு ஏற்பட்டுள்ளதாக NSW Health-இன் COVID-19 & influenza வாராந்திர அறிக்கை கூறுகிறது. 

தெற்கு ஆஸ்திரேலியா நாளை மே 28 அன்று Community Vaccination Day-ஐ நடத்த உள்ளது. சில உள்ளூர் கவுன்சில்கள் மற்றும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம், தடுப்பூசி கிளினிக்கிற்கு செல்வதற்கு உதவி தேவைப்படும் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை வழங்கும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  8,690 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,369  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 822 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,921 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 9,948 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  11 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,169  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

ACT- இல் புதிதாக  849 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  277 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 27 May 2022 2:22pm


Share this with family and friends