விக்டோரியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 18ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Melbourne Skyline

Victorians are set to enjoy greater freedoms with restrictions easing from midnight and state approaching the 90 per cent vaccination target this weekend. Source: AAP Image/LUIS ASCUI

  • விக்டோரியாவில் இன்று நள்ளிரவு முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான density limits-எண்ணிக்கை வரம்புகள் நீக்கப்படுகின்றன.
  • கோவிட் தொற்று தொடர்பிலான தனிமைப்படுத்தல் விதிகளில் விக்டோரியா மாநிலம் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தமக்கான negative சோதனை முடிவைப்பெறும்வரை மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். இருப்பினும் தொற்றுக்குள்ளானவர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் எனில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
  • விக்டோரியா நாடாளுமன்றம் pandemic laws-தொற்றுநோய் தொடர்பிலான சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளது.
  • Nothern Territory-இல் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது குறித்த genomic sequencing சோதனை முடிவுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
  • நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 80 சதவீதத்தைக் கடந்துவிட்ட பின்னணியில், ஆஸ்திரேலியர்கள் தமது வாழ்க்கையை தாமே முன்னெடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டதென பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.  

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,007 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 262 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 25 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 18 November 2021 2:15pm
Updated 18 November 2021 2:29pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends