- விக்டோரிய மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்
- NSW மாநிலத்தில் வணிக நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு தொடர்கிறது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இரண்டு பேருக்குத் தொற்று
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,143 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் பட்டியலில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், தொடர்ந்து வேலை செய்ய, அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் சுற்றையும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டிருக்க வேண்டும்.
கட்டுமானத் தளங்கள், அக்டோபர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், 25 சதவீத தொழிலாளர்களுடன் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் முதல் சுற்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
Moorabool உள்ளூராட்சிப் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் முடக்க நிலை நடைமுறைக்கு வருகிறது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 864 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 15 பேர் இறந்துள்ளார்கள்.
முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்கும் நிதி ஆதரவு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மா நில கருவூலக்காப்பாளர் Dominic Perrottet அறிவித்தார்.
சிறு வணிகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் தொடரும். 75,000 டொலருக்கும் குறைவான வருமானமீட்டும் சிறு வணிகங்களுக்கு வழங்கப்படும் தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை 750 டொலர்கள் வழங்கப்படும்.
JobSaver திட்டத்தில் சிறு மாற்றம் அறிமுகமாகிறது. வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை இழந்த வணிகங்களுக்கு JobSaver திட்டம் தொடரும்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 53 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள்.
ACTயில் வாழும் மக்களில் 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டிருக்கிறார்கள் என்றும் அதில் பெரும்பான்மையானவர்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் ACT Chief Minister Andrew Barr கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Berrimah, Winnellie மற்றும் டார்வின் நகரின் East Arm பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களின் கழிவு நீரில் கொரோனாவைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Source: SBS
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.