- விக்டோரியா மாநிலத்தில் அண்மை நாட்களில் Covid-19 தொற்றினால் ஒரே நாளில் மிக அதிகமானவர்கள் இறந்தது இன்று என்று பதியப்பட்டுள்ளது
- NSW மாநிலத்தில் 80 சதவீதமானவர்கள் இந்த வார இறுதியில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- ACTயில் நூற்றுக்கணக்கான இடங்கள் தொற்று கண்ட இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,571 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மெல்பன் நகரிலுள்ள Royal Children's Hospital மருத்துவமனையின் neonatal தீவிர சிகிச்சைப் பிரிவிற்குத் தொற்றுடன் பெற்றோர் ஒருவர் சென்றதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் பலருக்குத் தொற்று ஏற்பட்டது நாம் அறிந்த செய்தி. அந்த மருத்துவமனையில் தற்போது அவசரமாக செய்யத் தேவையில்லாத அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மருத்துவமனைக்கு செல்பவர்கள் அனைவரும் அன்டிஜன் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hume பகுதியிலுள்ள Mitchell Shire உள்ளூராட்சிப் பகுதியில் நடைமுறையிலிருந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்றிரவு நிறைவுக்கு வருகின்றன என்று சுகாதார அமைச்சர் Martin Foley அறிவித்தார்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 444 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.
NSW மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 80 சதவீதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடக்கநிலை கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்படும் தளர்வுகளில் மாற்றங்களை அறிவிக்க விரும்புவதாக Premier Dominic Perrottet கூறினார். தனது அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து நாளை பேசி விட்டு, அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 75.2 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 51 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்ட 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் எட்டுப் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்து பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கன்பராவில் மொத்தமாக 370ற்கும் அதிகமான இடங்கள் தொற்று கண்ட இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. என்பதை இணையத் தளத்தில் பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
விக்டோரியா மாநிலத்தின் சுகாதாரத் துறையில் பணியாற்ற என்று 1,000 பேரை வெளிநாடுகளில் இருந்து பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
உலகிலேயே மிக அதிக வீதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்ற பெருமை ACT வாழ் மக்களுக்குச் சேர இருக்கிறது. தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத முடிவிற்குள் 99 சதவீதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.