விக்டோரியா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்கின்றன

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Melbourne's CBD is seen from the banks of Williamstown.

Melbourne's CBD is seen from the banks of Williamstown. Source: AAP


  • விக்டோரியா மாநிலத்தில் Covid-19 கட்டுப்பாடுகள் இன்று மேலும் தளர்த்தப்படுவதை அம்மாநில மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்
  • இந்த வார இறுதியில் Halloween கொண்டாட்டங்களை தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக (COVID-safe வகையில்) செய்யுமாறு NSW மாநிலத்தவர் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்
  • விக்டோரியா மாநிலத்தில் Covid-19 தடுப்பூசி போடாமலிருக்க விலக்கு பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,656 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பத்துப் பேர் உயிரிழந்துள்ளார்கள்.  மாநிலத்தில் Covid-19 கட்டுப்பாடுகள் இன்று மாலை ஆறு மணிக்கு மேலும் தளர்த்தப்படுகின்றன.

அதியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் பல வாரங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படுகின்றன.  உணவகங்கள், pubகள், மற்றும் கஃபேக்களுள் மேலும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மாநிலத்தின் பிராந்திய இடங்களுக்கும் மெல்பன் நகருக்கும் இடையில் பயணத்தடை நீக்கப்படுகிறது.  மெல்பன் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்கு பிராந்திய இடங்களில் இருந்து பலர் மெல்பன் நகர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் முக கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளில் மாற்றம் வருகிறது – வெளி இடங்களில் முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் உட்புறங்களில் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்பது தொடர்கிறது.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 268 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த வார இறுதியில் Halloween கொண்டாட்டங்களை தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக (COVID-safe வகையில்) செய்யுமாறு NSW மாநிலத்தவர் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.  கொண்டாட்டங்களை வெளி இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும், சிறுவர்களுக்கு இனிப்பு வகைகளைப் பகிரும் போது தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாகப் பத்துப் பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தற்போது தொற்றுள்ளவர்கள் என்று மொத்தமாக 234 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
  • COVID-19 தொற்றினால் இறந்தவர்கள் குறித்த தரவுகளை, ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட .
  • கலாச்சார, சமய மற்றும் மருத்துவ காரணங்களுக்காக கோவிட்-19 தடுப்பூசி போடாமலிருக்க விலக்கு கோருபவர்கள் Australian Immunisation Register எனும் நோய்த் தடுப்புப் பதிவேட்டை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று விக்டோரியா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 29 October 2021 12:45pm
Updated 12 August 2022 3:01pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends