- விக்டோரிய மாநில எல்லைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு பயணக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் மீள் அறிமுகம்
- NSW மாநிலத்தில் வாழ்பவர்கள் தொடர்ந்தும் கவனமாக இயங்குமாறு கோரிக்கை
- கன்பராவில் வாழ்பவர்களில் 68 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
- குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்கின்றன
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,838 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள்.
விக்டோரிய மாநில எல்லைகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டில் உள்ள தளார்வுகள் Benalla, Greater Bendigo, Buloke Shire, Loddon, Yarriambiack, Hay, Edward River, Lockhart, Murrumbidgee, மற்றும் Wagga Wagga பகுதி உள்ளூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட இடங்களில் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேல் வாழ்ந்தவர்கள், பயணிக்கலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 646 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 11 பேர் இறந்துள்ளார்கள். மொத்தமாக, தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
Hunter New England பகுதிகளிலும், மேற்கு NSW இலுள்ள Quirindi மற்றும் Brewarrina பகுதிகளிலுள்ள கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
NSW மாநில மக்கள் அனைவரும் தொடர்ந்தும் முக கவசங்களை அணிய வேண்டும் என்றும், QR Code மூலம் அவர்களது வரவுகளைப் பதிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி தொடர்ந்து பேண வேண்டும் என்றும், தொற்றுக்கான ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனே சோதனை செய்து கொள்ளுமாறும் NSW மாநில தலைமை சுகாதார அதிகாரி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 40 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தொற்று ஏற்பட்டவர்களில் 16 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், ஐந்து பேருக்கு சுவாசக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Brisbane, Logan, Gold Coast, Moreton Bay, (Magnetic Island உட்பட)Townsville, மற்றும் Palm Island உள்ளூராட்சிப் பகுதிகளில், இன்று மாலை 4 மணி முதல், மாநிலத்தின் மற்றைய பகுதிகளில் நடைமுறையிலுள்ள நடைமுறைக்கு வரும்.
- தெற்கு ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் மாநிலத்தின் மற்றைய பகுதிகளில் நடைமுறையிலுள்ள நடைமுறைக்கு வரும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.