- விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்குப் போதிய தடுப்பூசிகள் கிடைக்கின்றன
- NSW மாநிலத்தில் 67.5 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
- கன்பராவில் வாழும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதத்தினர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,763 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.
நாட்டில் மிக அதிகமான அளவு தொற்றாளர்களை ஒரு நாளில் அடையாளம் கண்ட மாநிலம் என்று விக்டோரியா மாநிலம் பெயர் பெற்றுள்ளது
தடுப்பூசி போட விரும்புபவர்களுக்குப் போதியளவு Pfizer, AstraZeneca மற்றும் Moderna தடுப்பூசிகள் மாநிலத்தில் கிடைக்கிறது என்று Premier Daniel Andrews கூறினார்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் இன்று முதல் வேலைக்குத் திரும்பலாம். கட்டுமானத் தளங்கள் COVID-19 (safeguards) பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், வேலை செய்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
Latrobe Valley பகுதியில் நடைமுறையிலிருக்கும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 608 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.
மாநிலத்தில் வாழ்பவர்களில் (ஞாயிறு, அக்டோபர் 3ஆம் தேதி பிற்பகல் 11:59 மணிக்குப் பெற்ற தரவுகளின்படி) 16 வயதிற்கும் மேற்பட்டோரில் 88.5 67 சதவீதமானோர் தற்போது தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 67.5 சதவீதமானோர் தற்போது தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுள்ளார்கள்.
Taree, Forster-Tuncurry மற்றும் Muswellbrook உள்ளூராட்சிப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘வீட்டிலேயே தங்கியிருங்கள்’ என்ற கட்டளை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 33 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் குறைந்தது 14 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
ACTயில் 12 வயதிற்கும் மேற்பட்டோரில் 94 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்; 65 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில்
- நாட்டில் 16 வயதிற்கும் மேற்பட்டோரில் 80 சதவீதமானோர், நவம்பர் மாத நடுப்பகுதியில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.