- பெருந்தொற்று குறித்த புதிய சட்டங்கள் விக்டோரியா மாநிலத்தில் அறிமுகமாகின்றன
- குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு மீண்டும் வெளிநாட்டு மாணவர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள்
- தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை முற்றாக நீக்க Northern Territory திட்டமிடுகிறது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,510 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
பெருந்தொற்று குறித்து அறிமுகமாகும் புதிய சட்டங்கள் விக்டோரியா மாநிலத்தில் நடைமுறைக்கு வந்த பின்னர், தலைமை சுகாதார அதிகாரி மற்றும் சுகாதாரத் துறையினர் பரிந்துரைகளின் பேரில், மாநிலத்தில் பெருந்தொற்று நிலவுகிறது என்பதை மாநில premier அறிவிக்க முடியும்.
தற்போது நடைமுறையிலிருக்கும் அவசர காலச் சட்டத்தில், நிலமை குறித்து நான்கு வாரங்களுக்கு ஒரு முறை சுகாதார அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவசர காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக புதிய சட்டம் அறிமுகமாகிறது என்று சுகாதார அமைச்சர் Martin Foley கூறினார்.
நிதி நெருக்கடியை எதிர் நோக்குபவர்கள் குற்றப்பணங்கள் கட்டுவதற்கு சிரமப்பட்டால், விண்ணப்பத்தின் பேரில் அவர்கள் செலுத்த வேண்டிய குற்றப்பணம் குறைக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது.
மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து தளர்த்தப்படுகின்றன என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.
குயின்ஸ்லாந்து
வெளிநாட்டு மாணவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு அடுத்த வருடம் திரும்பலாம் என்று Premier Anastasia Palaszczuk அறிவித்தார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தொற்றைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 282 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாநிலத்தில் வாழ்பவர்களில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 85 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில்
- ACTயில் சமூகப் பரவல் மூலம் புதிதாக 12 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
- தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை ஜனவரி மாதம் 18ஆம் தேதி முதல் முற்றாக நீக்க Northern Territory திட்டமிடுகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.