கோவிட் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் மேலும் 74 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 18ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Paramedics are seen tending to their ambulance outside St Vincent hospital in Melbourne.

Paramedics are seen tending to their ambulance outside St Vincent hospital in Melbourne. Source: AAP

  • NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பான 74 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • Omicron அலை விக்டோரிய சுகாதார சேவைகள் மீது பாரிய அழுத்தத்ததை ஏற்படுத்தியுள்ளதால், மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் Code Brown அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
  • விக்டோரிய சுகாதார சேவைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Deputy Premier James Merlino கூறியுள்ளார்.
  • NSW மாநிலத்தில் 29,830 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  இதில் பெரும்பாலானவை PCR சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
  • NSW மாநிலத்தில் 2,850 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 209 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 
  • நள்ளிரவில் இருந்து, டாஸ்மேனியா செல்லும் பயணிகள்(முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்) தங்கள் பயணத்தை பதிவு செய்யவோ அல்லது பயணத்திற்கு முன் கோவிட் பரிசோதனை செய்யவோ தேவையில்லை. இருப்பினும் தடுப்பூசி போடாதவர்களுக்கான விதிகளில் மாற்றமில்லை.
  • குயின்ஸ்லாந்தில் புதிய பள்ளி ஆண்டு இரண்டு வாரங்கள் தாமதமாக மீண்டும் தொடங்கும், தற்போதைய சூழ்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகள் அதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
  • குயின்ஸ்லாந்தில் 16 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சுகாதார மையங்களில் வைரஸ் பரவுவதைக் குறைக்கும்வகையில் மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கான விதிகளில் மாநில சுகாதார அமைச்சர் Yvette D'Ath, மாற்றங்களை அறிவித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் கனடாவில் கோவிட் பரவல் அதிகமாக உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கான பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்குகிறது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  29,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 20,180 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  22  பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,310 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 15,962 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  16 பேர் மரணமடைந்தனர். 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 18 January 2022 3:04pm


Share this with family and friends