விக்டோரியாவில் மேலும் இருவருக்கு Omicron தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 10ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

COVID-19

Omicron variant concerns Source: AAP

  • விக்டோரியாவில் புதிதாக Omicron தொற்றுக்கண்ட இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
  • ஆஸ்திரேலியர்களுக்கு 40 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
  • குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் கனடாவின் அனுபவத்திலிருந்து ஆஸ்திரேலியா கற்றுக்கொண்டதாக Scott Morrison கூறியுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவிலுள்ள 5- 11 வயது வரையிலான குழந்தைகள் அடுத்த மாதம் முதல்  Pfizer கோவிட்-19 தடுப்பூசியைப் பெற முடியும். அதேநேரம் Moderna தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
  • Gold Coast-இல் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஆறு பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள இடங்களில் ஒரு பள்ளியும் அடங்குகிறது.
  • NSW மாநிலத்தில் புதிதாக Omicron தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.  இருப்பினும் NSW இன் Regional பகுதியில் கழிவுநீரில் கொரோனா வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • Pfizer நிறுவனம் தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்யும்வரை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய முடியாது என ACT தெரிவித்துள்ளது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,206 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 516 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  குயின்ஸ்லாந்தில் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 10 December 2021 3:02pm
Updated 10 December 2021 3:13pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends