- தென்னாபிரிக்காவில் திரிபடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ள பின்னணியில், தற்போதைக்கு தென்னாபிரிக்காவுக்கான பயணத்தடையை விதிக்கும் எண்ணம் கிடையாது என, ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NU அல்லது B.1.621 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய வைரஸ், COVID தடுப்பூசிகளுக்கு எதிரான வீரியம் கொண்டதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
- உள்நாட்டு பயணிகள் விக்டோரியாவுக்குள் நுழையும்போது permit system என்ற நடைமுறையின்கீழ் பயண அனுமதியைப்பெறவேண்டியிருந்த நிலையில், இம்முறைமை நீக்கப்படுவதாக விக்டோரியா அறிவித்துள்ளது.
- NSW மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் -களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் ஜூன் 30 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஏனைய 20 வீதத்தினரையும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதால், குயின்ஸ்லாந்து மாநிலம் 80 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டிய பின்னரும்கூட, தமது இறுக்கமான கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க முடியாதென குயின்ஸ்லாந்து தெரிவித்துள்ளது.
- COVID பரவலால் பாதிக்கப்பட்ட Northern Territory-இல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளில், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு தொடர்பான தவறான தகவல்களை Amnesty International UK பரப்பியமை குறித்து தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக Amnesty International Australia தெரிவித்துள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1362 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 261 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 8 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. NT-இல் புதிய தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.