வெளி நாடுகளுக்கு நவம்பர் முதல் நாளிலிருந்து பயணிக்க மக்கள் தயாராகிறார்கள்

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 27ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

File photo of passengers wearing protective masks collecting baggage after arriving on a flight at Sydney Airport.

File photo of passengers wearing protective masks collecting baggage after arriving on a flight at Sydney Airport. Source: AAP

  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மூன்றாவது சுற்று தடுப்பூசியாக Pfizer தடுப்பூசி, இரண்டாவது சுற்று தடுப்பூசிக்கு பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு வழங்க வழங்கப்படலாம் என்று TGA அனுமதி வழங்கியுள்ளது
  • NSW மாநிலம் எங்கும் பயணிக்கலாம் என்ற அனுமதி மிக விரைவில் வழங்கப்படுவது குறித்து தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் எச்சரித்தார்
  • சர்வதேச எல்லைகள் மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட பயணிகள் நாட்டை விட்டு வெளியேற இனிமேல் விதிவிலக்குப் பெறத் தேவையில்லை.

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 304 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றாளர் எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையிலும் சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NSW மாநிலம் எங்கும் பயணிக்கலாம் என்ற அனுமதி அடுத்த திங்கட்கிழமை நடைமுறைக்கு வருகிறது.  கட்டுப்பாடுகள் மிக விரைவில் வழங்கப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ள தொற்று நோயியல் நிபுணர் Mary Louise McLaws, பிராந்திய இடங்களில் வாழ்பவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Covid-19 தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமைக்கப்பட்ட குழு (COVID economic recovery committee) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதிலுள்ள விடயங்களை இந்த வாரம் விரிவாக ஆராயும் என்று மாநில Premier Dominic Perrottetகூறினார்.

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,534 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள்.  கட்டுப்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேலும் தளர்த்தப்படவுள்ளன.

மாநிலத்திலுள்ள கஃபேக்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்கள் தேவையான உபகரணங்களை வாங்க அரசு 2,000 டொலர் நிதியுதவி வழங்குகிறது.

ஒரு இடத்திற்கு சென்றதைப் பதிவு செய்யும் QR code செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் சென்றிருந்த இடத்திற்கு வேறொரு தொற்றுள்ளவர் அதே நேரம் சென்றிருந்தால், அது குறித்து அவர் செயலி வழியாக எச்சரிக்கப்படுவார்.

கடந்த 24 மணி நேரத்தில்

  • Covid-19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, Pfizer தடுப்பூசி மூன்றாவது சுற்றாக – booster shot ஆக வழங்கப்படுவதற்கு மருந்துகளைக் கட்டுப்படுத்தும் The Therapeutic Goods Administration (சுருக்கமாக TGA) அனுமதி வழங்கியுள்ளது. முதியோர் பராமரிப்பிடங்களில் வசிப்பவர்களுக்கு இது முதலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மூன்றாவது சுற்று தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று TGA இன்று காலை அறிவித்தது.
  • டாஸ்மேனியா மாநிலத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களில் 97 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள் என்று டாஸ்மேனியா மாநில அரசு அறிவித்தது.
  • ACTயில் சமூகப் பரவல் மூலம் புதிதாக 12 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.  நாட்டின் தலை நகரில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 90 சதவீதத்தை எட்டவுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 27 October 2021 2:00pm
Updated 12 August 2022 3:01pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends