கோவிட் சிகிச்சைக்கான இரு மாத்திரைகள் மற்றும் புதிய தடுப்பூசிக்கு TGA அனுமதி!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

L’Australie valide le vaccin Novarax.

Source: AP

  • Novavax கோவிட்-19 தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கு Therapeutic Goods Administration (TGA) அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம் 51 மில்லியன் Novavax தடுப்பூசிகளை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்கிறது.
  • கோவிட் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய இரு வைரஸ் எதிர்ப்பு(anti-viral) வாய்வழி மாத்திரைகளுக்கு TGA தற்காலிக ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • Paxlovid மற்றும்  molnupiravir ஆகிய மாத்திரைகள் அடுத்து வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவை வந்தடையத் தொடங்கும் என சுகாதார அமைச்சர் Greg Hunt  கூறுகிறார்.
  • ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொடர்பான மேலும் 60 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  30,825 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 
  • NSW மாநிலத்தில் 2,781 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 212 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய பள்ளி ஆண்டிற்குள் பாதுகாப்பாக நுழைவது தொடர்பில் இன்று கூடிய தேசிய அமைச்சரவை ஆராய்ந்துள்ளது.
  • குயின்ஸ்லாந்தில் புதிதாக 16,812 கோவிட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 9 பேர் மரணமடைந்தனர். இவர்களில் ஏற்கனவே வேறொரு நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவரும் அடங்குகிறார். 
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாத இறுதியில் உச்சத்தை அடையும் என சுகாதார அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  30,825 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 21,966 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15  பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 927 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 16,812 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  9 பேர் மரணமடைந்தனர். 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 20 January 2022 4:02pm
Updated 20 January 2022 4:27pm


Share this with family and friends