- New South Wales மாநிலத்தில், அடையாளம் காட்டப்பட்ட தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் உடற்பயிற்சி செய்வதற்கு தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே வெளியே செல்ல முடியும்
- விக்டோரியா மாநிலத்தில் புதிதாகத் தொற்று பரவிய 22 பேருக்கு தொற்று எங்கிருந்து பரவியது என்பது தெரியவில்லை
- ACTயில் 16 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்
- தெற்கு ஆஸ்திரேலியாவில் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் முறை பரீட்சிக்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 818 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 42 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர். தொற்று ஏற்பட்டு மூன்று பேர் இறந்துள்ளார்கள். இறந்தவர்களில் மூவரும் வயது எண்பதுகளில் உள்ளவர்கள், மூவருக்கும் ஏற்கனவே வேறு நோய்கள் இருந்துள்ளன.
New South Wales மாநிலத்தில் ப்படுத்தப் படுகின்றன. Canterbury-Bankstown, Cumberland மற்றும் Fairfield பகுதிகளில் வசிப்பவர்கள் அந்தப் பகுதிகளுக்கு வெளியே வேலை செய்ய COVID-19 சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 71 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 22 பேருக்கு ஏற்பட்ட தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.
Essendon West, Camberwell, Thornbury, Fitzroy North, Maidstone மற்றும் Sorrento பகுதியில் ஏற்பட்ட தொற்று குறித்து விசாரிக்கப்படுகிறது.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 3 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள். மேலும் 3 பேருக்கு ஏற்பட்ட தொற்று எப்படி ஏற்பட்டது என்று விசாரிக்கப்படுகிறது.
16 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இப்போது ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற இணையதளத்தில் மூலம் பதிவு செய்யலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஒருவருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
- தெற்கு ஆஸ்திரேலியாவில் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் முறை பரீட்சிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தல் விடுதிகளுக்கு மக்களை அனுப்பாமல், அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் முறை செயல்படுத்தப்படுவதற்கு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் (geo-location) மற்றும் அவர்கள் முகங்களை அடையாளம் காணும் (facial recognition software) செயலிகள் பயன்படுத்தப்படும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.