சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு! பிரதமர் வலியுறுத்தல்!!

வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்கள் தமது பயணத்திற்கு முன்னதாக கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டியிருந்தநிலையில், இந்நடைமுறையைக் கைவிடுவதற்கு திட்டமிடுவதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.

AAP

Source: AAP

ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நாள்முதல், குறிப்பிட்ட பயணியொருவர் தனக்கு கோவிட் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாய நடைமுறை பேணப்பட்டுவந்தது.

பின்னர் Antigen சோதனையையும் முதன்மை சோதனையாக ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டதையடுத்து, பயணியொருவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு  24 மணித்தியாலங்களுக்குள், Antigen சோதனையை மேற்கொண்டு தனக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபிக்கலாம் என்ற நடைமுறை கடந்த ஜனவரி 23 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப்பின்னணியில் தற்போது விமானப் பயணத்திற்கு முன்னர் கோவிட் சோதனை மேற்கொள்ளவேண்டும் என்ற கட்டாய நடைமுறையைக் கைவிடுவதற்குத் திட்டமிடுவதாகவும், இது தொடர்பிலான அறிவிப்பொன்றை  சுகாதார அமைச்சர் Greg Hunt விரைவில் வெளியிடுவார் எனவும் பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.

சர்வதேச பயணிகளுக்கான இந்தச் சலுகை நடைமுறைக்குவரும் பட்சத்தில், ஆஸ்திரேலியா எட்டும் மற்றுமொரு மைல்கல்லாக இது அமையும் என்பதுடன், பயணிகளுக்கும் இது மிகப்பெரும் நன்மையாக அமையும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும், அதனடிப்படையில் இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் Greg Hunt-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 23 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 24,115 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 1,162 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 44 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,471 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர். 243 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,979 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 32 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 1,314 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  42 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 10,476 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 252 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 23 March 2022 1:42pm
Updated 23 March 2022 1:50pm


Share this with family and friends