குயின்ஸ்லாந்து செல்லும் உள்நாட்டுப் பயணிகளுக்கான PCR சோதனை நடைமுறை நீக்கப்படுகிறது!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 29ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Rapid antigen tests are available in supermarkets and pharmacies across Australia

Rapid antigen tests are available in supermarkets and pharmacies across Australia. Source: AAP/Lukas Coch

  • குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குச் செல்லும் உள்நாட்டுப்பயணிகள், தமது பயணத்திற்கு முன்னதாக PCR சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், இந்நடைமுறை ஜனவரி 1 முதல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக rapid antigen சோதனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாநில Premier Annastacia Palaszczuk அறிவித்துள்ளார். 
  • புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குகின்ற பின்னணியில்,  நாடு முழுவதும் உள்ள கோவிட்-19 சோதனை நடைமுறைகள் குறித்து விவாதிக்கவென, தேசிய அமைச்சரவை வியாழக்கிழமை அவசரமாக கூடுகிறது.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சமூகப்பரவல் ஊடாக தொற்றுக் கண்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 11,201 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • விக்டோரியா மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று அதியுச்சத்தை அடைந்துள்ள பின்னணியில் அம்மாநில மக்கள் ஜனவரி முதல் இலவச rapid antigen சோதனை வசதியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தெற்கு ஆஸ்திரேலியா வருபவர்களுக்கான நுழைவு நிபந்தனைகளில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  விக்டோரியா-தெற்கு ஆஸ்திரேலியா எல்லைப் பகுதிகளில்  rapid antigen test kits விற்றுத் தீர்ந்துள்ளன.
  • நோய் அறிகுறியற்ற கோவிட்-19 தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை, பத்திலிருந்து ஐந்து நாட்களாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறைத்துள்ளனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 11,201 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 3,767 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவர் மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,589 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ACT-இல் புதிதாக 252 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,471 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 29 December 2021 1:54pm
Updated 29 December 2021 2:06pm


Share this with family and friends