குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Kiongozi wa Queensland Annastacia Palaszczuk (katikati) akizungumza na wafanyakazi katika kituo cha chanjo cha Logan

Kiongozi wa Queensland Annastacia Palaszczuk (katikati), akizungumza na wafanyakazi katika kituo cha chanjo cha Logan. Source: AAP Image/Jono Searle

சிறப்பம்சங்கள்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டியவுடன், அல்லது டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் pubகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
  • தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும்.  அவசரகால சூழ்நிலைகள் அல்லது உயிர் போகும் சூழலில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு வழங்கப்படும்.
  • தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடைந்த பின்னர், குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டிய கட்டாயமில்லை.  இருந்தாலும், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
  • COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பர் என்றும், அவர்களுக்குத் தொற்றின் வெளிப்பாடு இலேசானதாக அல்லது மிகவும் குறைவானதாக இருக்கும் என்று Doherty Institute வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை சொல்கிறது.
  • Northern Territory பிரதேசத்தில் கட்டுப்பாடுகள் மூன்று கட்டங்களாக நீக்கப்படும்.  வீட்டிலேயே தனிமைப்படுத்தல் என்ற திட்டம் நவம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது.

Covid-19 புள்ளிவிவரங்கள்

  • விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,069 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பத்துப் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
  • New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 222 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 9 November 2021 2:13pm
Updated 12 August 2022 3:01pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends