மேலும் இரு நாடுகளுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணத்தை ஆரம்பிக்க அரசு திட்டம்!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் பத்தாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

The Brisbane skyline is seen at sunset from the suburb of Balmoral in Brisbane.

The Brisbane skyline is seen at sunset from the suburb of Balmoral in Brisbane. Source: AAP

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தடுப்பூசியின் முதல் சுற்றைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, நாளை  80 சதவீதத்தினை எட்டும் என அம்மாநில Premier Annastacia Palaszczuk தெரிவித்தார். இதற்கிடையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலத்தின் சில இடங்களுக்குச் செல்வதற்கு தடைவிதிப்பது என்ற அரசின் திட்டத்திற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தொழிலதிபர் Clive Palmer திட்டமிட்டுள்ளார்.
  • தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணத்தை ஆரம்பிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருகிறது. சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள பயண ஏற்பாட்டைப் போன்றே, இவ்விரு நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
  • விக்டோரியாவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 84 சதவீதத்திற்கும் அதிகமானோர், குறைந்தபட்சம் கோவிட் தடுப்பூசியின் முதல்சுற்றை பெற்றுள்ளனர். மாநிலத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டும்போது, கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 90 சதவீத இலக்கு நவம்பர் 24ம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,003 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 216 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 3 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ACT-இல் புதிதாக 9 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 10 November 2021 2:29pm
Updated 10 November 2021 2:45pm


Share this with family and friends