- விக்டோரியா மாநிலத்தில் 1,993 புதிய தொற்றாளர்கள்
- NSW மாநிலத்தில், தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
- மேலும் பலருக்கு அனுமதி
- டாஸ்மேனிய மாநிலத்தின் தென் பகுதியில் முடக்கநிலை
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,993 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இறந்தவர்களில் ஒருவர் 15 வயதானவர் என்றும், மற்றவர்களுக்கு ஏற்கனவே சில உடல் நலக்குறைவுகள் இருந்தன என்றும் மாநில COVID-19 Commander Jeroen Weimar கூறினார்.
விக்டோரிய மாநிலத்தில் தற்போது 21,600ற்கும் அதிகமானவர்களுக்குத் தொற்று இருக்கிறது. தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 138ஆக உயர்ந்துள்ளது.
தொற்று கண்டவர்களில் 163 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 160 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 88.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 64.3 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் நேற்று 66,311 பேர் தொற்று இருக்கிறதா என்ற சோதனை செய்துள்ளார்கள். சமூகப் பரவல் மூலம், புதிதாக 319 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 78.8 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறையினர் அறிவித்தார்கள். மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டிய பின்னர், மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில்
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 20 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 18 நாட்களில் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த தொகை இதுவாகும்.
- டாஸ்மேனிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. முடக்கநிலை கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்று, அந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் மாநில Premier Peter Gutwein கோரினார்.
- டாஸ்மேனிய மாநிலத்தின் சில பகுதியில் வாழ்பவர்கள் நாளை, அக்டோபர் 17ஆம் தேதிக்குப் பின்னர் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குப் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.