கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொலைபேசி மூலம் தேர்தலில் வாக்களிக்கலாம்!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Voters at the Indooroopilly pre-polling booth in Brisbane. (file)

Voters at the Indooroopilly pre-polling booth in Brisbane. (file) Source: AAP Image/Darren England

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, NT மற்றும்  குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 52 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்றையதினம் 17,105 புதிய தொற்றுக்கள் பதிவாகிய பின்னணியில், இன்று இந்த எண்ணிக்கை 15,205 ஆக குறைவடைந்துள்ளது. 304 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள  தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ACT-இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை 84 பேர் கோவிட் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ACT தெரிவித்துள்ளது.

மே 13 மாலை 6 மணிக்கு அல்லது அதற்குப் பிறகு கோவிட் தொற்று  உறுதிசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய வாக்காளர்கள் தொலைபேசி மூலம் வாக்களிக்கலாம்.

இவர்கள் தொலைபேசி மூலம் பின்வரும் நேரங்களில் வாக்களிக்க முடியும்:

20 மே 2022 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை
21 மே 2022 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

சீனாவின் CanSino Biologics தயாரித்த CONVIDECIA என்ற தடுப்பூசியை 11வது கோவிட்-19 தடுப்பூசியாக அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  10,084 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,556  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 967 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,220 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 15,205 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஐவர் மரணமடைந்தனர். (இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன). 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,901  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  963 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  290 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர்  மரணமடைந்தார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 20 May 2022 2:38pm
Updated 20 May 2022 2:42pm


Share this with family and friends