NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 6ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Signage is seen at Regents Park Christian School in Regents Park, Sydney

Signage is seen at Regents Park Christian School in Regents Park, Sydney Source: AAP Image/Bianca De Marchi

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 பேர் மாத்திரமே வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்தவர்கள் ஆவர்.
  • விக்டோரியா, NSW மற்றும் ACT-இலிருந்து வரும் பயணிகளுக்கு, கூடுதல் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  தெற்கு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • ACT- இல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
  • மேற்கு ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், மாநிலத்திலுள்ள 5 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டுமென WA  Medical Association  விருப்பம் தெரிவித்துள்ளது.  12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டவுடன் மேற்கு ஆஸ்திரேலிய  எல்லையை மீண்டும் திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • புதிய Omicron திரிபு அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும், கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி மாநில எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்று விக்டோரியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் Martin Pakula தெரிவித்துள்ளார்.
  • Delta திரிபைவிட Omicron திரிபு குறைந்தளவு ஆபத்தானதாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,073 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 6  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 208 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 6 December 2021 2:51pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends