- NSW மாநிலத்தின் சில பிராந்திய இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன
- விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களுக்கு அனுமதி இல்லாமல் செல்பவர்களைக் கண்காணிக்க கூடுதல் காவல்துறையினர்
- ACTயில் பயன்படுத்தப்படும் Covid செயலியில் மாற்றங்கள் அறிமுகம்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,405 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள்.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை த்தை Premier Gladys Berejiklian அறிவித்தார்.
வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும், வீட்டிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தால், ஐந்து விருந்தாளிகளை வீட்டிற்குள் வரவேற்க முடியும். நான்கு சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் நடமாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் விடுதிகள், கடைகள், விளையாட்டு அரங்குகள், முடிதிருத்தகம் போன்ற சேவை வழங்கும் இடங்கள் திறக்கப்படும்.
தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்குப் பூச்சியம் என்றிருக்கும் , செப்டம்பர் 11ஆம் தேதி முதல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 324 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 107 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.
விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், மெல்பனில் இருந்து பிராந்திய இடங்களுக்கு அனுமதி இல்லாமல் செல்பவர்களைக் கண்காணிக்க கூடுதல் காவல்துறையினர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். அப்படி செல்பவர்களுக்கு 5,500 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 8 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
யில் மாற்றங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. தொற்று கண்ட இடங்களுக்குச் சென்றவர்களுக்கு செயலி தானாக அறிவிக்கும். அது தவிர, மொபைல் தொலைபேசி இல்லாதவர்களுக்கு, வழங்கப்படும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.