- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது 1,738 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 134 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,625 நோய்த்தொற்றுகள் பதிவாகியதை அடுத்து, அவசரமற்ற elective surgery பிப்ரவரி மாதம் வரை இடைநிறுத்தப்படுகிறது.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் rapid antigen சோதனையை மேற்கொண்டு நேர்மறை முடிவைப்பெறும் ஒருவர், அதனை சுகாதாரத் துறைக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் நாளாந்தம் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படுவார் எனவும் NSW Premier Dominic Perrottet தெரிவித்துள்ளார்.
- விக்டோரிய மாநிலத்தில் 644 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 58 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 24 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர்.
- குயின்ஸ்லாந்தில் 327 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- Omicron பரவல் அதிகரித்து வரும் நிலையில், pandemic leave disaster கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதிபெறுகின்றனரா என்பது தொடர்பில் அறிந்துகொள்ளுமாறு பிரதமர் Scott Morrison ஆஸ்திரேலியர்களை வலியுறுத்தியுள்ளார்.
- குயின்ஸ்லாந்தில் Omicron பரவல் மேலும் மோசமடைந்தால், ஆரம்பப் பள்ளிகளுக்கான term one-ஐத் தொடங்குவது இரண்டு வாரங்கள் வரை தாமதமாகலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
- Northern Territory-இல் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், இதுவரை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 16 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள், மூன்று காரணங்களுக்காக மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும். அத்துடன் அவர்களின் வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியாது.
- Omicron திரிபினால் ஏற்படும் பாதிப்புகளை இலேசானது என்று வர்ணிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 38,625 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 21,728 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,489 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 10,953 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் 3,707 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT-இல் புதிதாக 1,246 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.