- New South Wales மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள Trangie மற்றும் Byron Bay ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
- விக்டோரிய மாநிலத்தில் தொற்றுள்ளவர்களில் அதிகப்படியானோர் நாற்பது வயதைத் தாண்டாதவர்கள்
- ACTயில் மேலும் பலர் ஃபைசர் தடுப்பூசி போட முடியும்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கனரக வாகன ஓட்டுநர்கள் எதிர்ப்பு
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,290 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 883 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.
மாநிலத்தில் வாழும் மூவரில் இருவர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருப்பதாகவும், 36 சதவீதத்தினர் இரண்டு சுற்றுகளையும் போட்டுள்ளார்கள் என்றும் Premier Gladys Berejiklian உறுதி செய்தார். தடுப்பூசி இதே வேகத்தில் வழங்கப்பட்டால், அக்டோபர் மாத இறுதிக்குள் 70 சத வீத மக்கள் தடுப்பூசி போட்டு விடுவார்கள்.
வசிக்கும் அல்லது வேலை புரியும் சில அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள், , தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 73 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 21 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியாது. தொற்றுள்ள 805 பேரில் முக்கால்வாசிப் பேர் நாற்பது வயதிலும் குறைந்த வயதுடையவர்கள்
Hobsons Bay, Wyndham, மற்றும் Hume உள்ளூராட்சிப் பகுதிகளில் காணப்பட்டுள்ள தொற்றுகள் தவிர்த்து ஏனைய இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில சுகாதார அதிகாரி Dr Brett Sutton அறிவித்தார்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 12 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் 6 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
16 முதல் 29 வயதுடையவர்கள் ஃபைசர் தடுப்பூசியை அரசு நடத்தும் தடுப்பூசி மையங்களிலிருந்து இன்னும் சில நாட்களில் பெறலாம் என்று Chief Minister Andrew Barr கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கட்டுப்பாடுகளுக்கும் மாநில எல்லை மூடப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, Gold Coast மற்றும் Brisbane இடையிலான நெடுஞ்சாலையை மறித்து கனரக வாகன ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள்
நாட்டிலுள்ள 16 முதல் 39 வயதுடையவர்கள் அனைவரும் ஃபைசர் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாகிறார்கள்.

Source: ALC
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.