- New South Wales மாநிலத்தின் பல பகுதிகளில், கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
- விக்டோரிய மாநிலத்தில் 70,000 பேர் AstraZeneca தடுப்பூசி போட பதிவு செய்யலாம்,
- ACTயில் 16 முதல் 29 வயதானவர்கள் ஃபைசர் தடுப்பூசி போடலாம்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,116 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.
Thredbo, Merimbula, Port Macquarie, Dunbogan, Bonnie Hills, Warren, Molong, Tamworth மற்றும் Gunnedah ஆகிய இடங்களில் தொற்றுள்ளவர்கள் என்று யாரும் அடையாளம் காணப் படாவிட்டாலும், அந்தப் பகுதிகளில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
சர்வதேசப் பயணம் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கலாம் என்று Premier Gladys Berejiklian கருத்து வெளியிட்டார்.
டுக் கொள்ள பதிவு செய்யலாம். பெறலாம்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 120 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள்.
மாநிலத்தில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் முதல் சுற்றைப் போட்டுவிட்டால், 5 கிலோ மீட்டர் என்று தற்போது நடைமுறையிலிருக்கும் , 10 கிலோ மீட்டர் வரை என்று என்று Premier Daniel Andrews அறிவித்தார். தடுப்பூசி தற்போது வழங்கப்படும் வேகத்தில் வழங்கப்பட்டால், செப்டம்பர் 23ஆம் தேதி அந்த இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத் தொழிலாளர்களில் 90 சதவீதமானோர் தடுப்பூசியின் முதல் சுற்றைப் பெற்றவுடன் கட்டுமானப் பணிகள் 50 சதவீத செயல் திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தடுப்பூசி பெற செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து 12ஆம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்களது பொதுத்தேர்வு பரீட்சை அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெறும். மூன்றாவது தவணையின் போது மாணவர்கள் நேருக்கு நேர் கற்பதற்கு சாத்தியமில்லை.
விளையாட்டு மைதானங்கள் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்படும்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 23 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் 12 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
16 முதல் 29 வயதுடையவர்கள் ஃபைசர் தடுப்பூசியை அரசு நடத்தும் பாரிய தடுப்பூசி மையங்களிலிருந்து அல்லது சில குடும்ப மருத்துவர்களிடமிருந்து பெறலாம். அரசின் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட அக்டோபர் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.