- அதிகப்படியான பூர்வீக குடி மக்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாட்டில் NSW அரசு இறங்கியுள்ளது
- விக்டோரிய மாநிலத்தில் ஆறு மணி நேரம் பொது போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம்
- Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,331 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள். தொற்றுள்ளவர்களில் 1,219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
NSW மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் 81.2 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் பெற்றுள்ளதாகவும், 50.6 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார்.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பூர்வீக குடி மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த வார இறுதியில் பல பூர்வீக குடி சமூகங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 535 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 62 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.
தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக, மெல்பன் நகரில் பொது போக்குவரத்து சேவைகள் ஆறு மணி நேரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்குவோர் மற்றும் தடுப்பூசி போட செல்வோர் மட்டுமே மெல்பன் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில்
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஏழு பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40.54 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்.
- Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது, இந்த வார இறுதி முதல் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.