NSW மாநிலத்தில், இன்னொரு உச்சத்தில் தொற்றாளர்கள்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

 Bondi Beach in Sydney, Wednesday, August 25, 2021.

Members of the public exercise at Bondi Beach in Sydney, Wednesday, August 25, 2021. Source: AAP Image/Bianca De March

  • New South Wales மாநிலத்தில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை இன்னொரு உச்சத்தை எட்டியுள்ளது
  • விக்டோரியா மாநிலத்தில் தொற்றுள்ளவர்களில் அதிகமானோர் இளையோர்
  • ACTயில் Covid பரவலைக் கட்டுப்படுத்த, மேலதிகமானோர் சேவைக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தனிமைப்படுத்தல் விடுதிகளில் புதிதாக அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 919 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 37 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர்.  தொற்றினால் இருவர் மரணமடைந்துள்ளார்கள்

Guildford, Auburn, Merrylands, Greystanes, Granville, Punchbowl, Yagoona மற்றும் Blacktown ஆகிய இடங்கள், தொடர்ந்தும் தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களாக இருக்கின்றன.  இதே வேளை, Bateau Bay, Toukley மற்றும் Merimbula பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீரில் Covid வைரஸின் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant, அதில் 98 பேர் தடுப்பூசி போடவில்லை என்று கூறினார்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 45 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 28 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர்.

தற்போது தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 538 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள், அத்துடன், 114 பேர் ஒன்பது வயதுக்கும் குறைவானவர்கள் என்று மாநில சுகாதார அமைச்சர் Martin Foley கூறினார்.

16 -17 வயதுடையவர்கள் மாநில அரசு நடத்தும் தடுப்பூசி மையங்களில் ஃபைசர் தடுப்பூசி போடலாம், 18 வயதிற்கும் 39 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஃபைசர் அல்லது AstraZeneca தடுப்பூசி போடலாம், 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசி மட்டுமே போடலாம்.

என்ற தரவுகளை காணலாம்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 9 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  மொத்தமாகத் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதால், செவிலியர்கள், மாணவ செவிலியர்கள், பிரசவம் பார்ப்பவராகத் தேர்வாகக் கற்றுக் கொள்பவர்கள் என்று பலரையும் தடுப்பூசி போடும் செயல்பாட்டில் ஈடுபட வைக்கப் போவதாக பிராந்திய சுகாதார அமைச்சர் Rachel Stephen-Smith கூறினார்.

யுள்ளவரா என்று காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் ACTயிலிருந்து யாரும் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு செப்டம்பர் 8ஆம் தேதி புதன் கிழமைக்கு முன்னர் செல்ல முடியாது.  தனிமைப்படுத்தல் விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 25 August 2021 2:06pm
By Kulasegaram Sanchayan


Share this with family and friends