NSW மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 3 ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

sydney testing site

Health care workers administer COVID-19 PCR tests at the St Vincent’s Drive-through Clinic at Bondi Beach in Sydney, Friday, December 31, 2021. Source: Credit: AAP Image/Bianca De Marchi

ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1,204 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 95 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் தொற்று காரணமாக 491 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 56 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும், 24 பேர் வென்டிலேட்டர்களிலும் உள்ளனர்.

NSW மருத்துவமனை கட்டமைப்பு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள், ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டும் என்று Health Services Union (HSU) எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு மேலதிகமாக rapid antigen tests (RATs)ஐ கொள்வனவு செய்யவுள்ளதாகவும், மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றைப் பெறும் என எதிர்பார்ப்பதாகவும் Treasurer Josh Frydenberg தெரிவித்தார். 

நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக இனங்காணப்படுபவர்களுக்கு மட்டும் rapid antigen tests  இலவசம் எனவும், அனைவருக்கும் அது இலவசமாக வழங்கப்படாது எனவும் பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 20,794 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,577 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 466 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT-இல் புதிதாக 514 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,249 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 3 January 2022 2:14pm
Updated 3 January 2022 2:19pm


Share this with family and friends