- New South Wales மாநிலத்தின் தென் பகுதிகளிலும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
- விக்டோரிய மாநிலத்தில் இந்த வருடம் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
- ACTயில் 68 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இன்னொரு கனரக வாகன ஓட்டுனர் ஒருவருக்குத் தொற்று
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,288 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 70 சதவீதமாகிறது.
களில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘வெளியில் உடற்பயிற்சி செய்ய ஒரு மணி நேரம் மட்டும்’ என்ற வரம்பு நீக்கப்படுகிறது, மற்றைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
Bega, Cooma, மற்றும் Illawarra Shoalhaven Bomaderry ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 176 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 128 பேர் மெல்பன் நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வசிப்பவர்கள்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இன்றிரவு 11:59 முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெற்றோர் அல்லது ஒரு பராமரிப்பாளருடன் செல்ல முடியும். விளையாட்டு மைதானங்களில் QR குறியீடுகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், அங்கு செல்லும் பெரியவர்கள் சாப்பிட அல்லது அருந்த என்ற காரணத்தைக் காட்டியும் முக கவசத்தை அகற்றக் கூடாது.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 12 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் குறைந்தது 8 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
அரசின் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட செல்பவர்களுக்கு நாளை செப்டம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பேருந்து அல்லது light railஇல் பயணிக்க Transport Canberra இலவச சேவை வழங்கும்.
கடந்த 24 மணிநேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் சமூகப் பரவல் மூலம், புதிதாக இன்னொருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்ட இருவரும் கனரக வாகன ஓட்டுனர்கள். ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களல்ல.

Source: ALC
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.