தொற்றுள்ளவர் எண்ணிக்கையில் NSW மீண்டும் உச்சம்... ஆனால் “இது இன்னமும் ஓயவில்லை”

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 03ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

PARRAMATTA PARK SYDNEY

People are seen exercising outdoor at Parramatta park in Sydney, Friday, September 3, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • COVID-19 தொற்றுடன் New South Wales மாநிலத்தில் சுமார் 1,000 பேர் மருத்துவமனையில்
  • விக்டோரிய மாநிலத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் AstraZeneca தடுப்பூசி போடலாம்
  • ACTயில் வாடகை கொடுக்க முடியாதவர்களை வீட்டிலிருந்து வெளியேற்ற 12 வாரங்களுக்குத் தடை

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர்.  வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார்.

தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள்.  63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

டுக் கொள்ள பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 208 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்டவர்களில் 96 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும்.  வயது 60களிலுள்ள ஒரு ஆண் இறந்துள்ளார்.

12ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதற்கடுத்து 12 வயதுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மாநில Premier Andrews கூறினார்.

என்ற தரவுகளை காணலாம்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 18 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுடன் குறைந்தது 15 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

முடக்க நிலை காரணமாக, நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் வாடகை கட்ட முடியாமல் போனால் அவர்களை அடுத்த பிறப்பித்துள்ளது.

டுக் கொள்ள பதிவு செய்யலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் விடுதிகளில் 680 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பூர்வீக குடி மக்களுக்குத் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசி முழுமையாக போட்டிருக்கிறார்கள்.
  • டாஸ்மேனியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று இடைக்கால Premier Jeremy Rockliff அறிவித்தார்.

alc covid mental health
Source: ALC


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 3 September 2021 1:50pm
Updated 12 August 2022 2:59pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends