நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 13ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Traffic controllers direct cars at a drive-through COVID-19 testing clinic at Bondi Beach in Sydney.

Traffic controllers direct cars at a drive-through COVID-19 testing clinic at Bondi Beach in Sydney. Source: AAP

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • NSW மாநிலத்தில் முதல்தடவையாக antigen மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி 30,877 பேருக்கு PCR மூலமும் 61,387 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • NSW மாநிலத்தில் antigen மூலம் தொற்று உறுதிசெய்யப்படுபவர்கள் அதனை கட்டாயம் அறிக்கையிட வேண்டுமென்ற கட்டுப்பாடு நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
  • NSW மாநிலத்தில் இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து உறுதிசெய்யப்பட்ட நேர்மறை antigen சோதனைமுடிவுகள் இவ்வாறு அறிக்கையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  • NSW மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரே நாளில் 22 கோவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகின.
  • விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 37,169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் 25 பேர் மரணமடைந்தனர்.
  • விக்டோரிய மாநிலத்தில் 953 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 111 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 29 பேர் ventilator-களில் உள்ளனர்.
  • விக்டோரியாவில் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் உள்ளரங்கில் நடமாடுவதற்கான தடை வியாழக்கிழமைமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • அதிகரித்து வரும் கோவிட் பரவலுக்கு மத்தியில் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பள்ளிகளுக்குத் திரும்புவது என்பது குறித்த திட்டம் இன்று தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
  • Omicron திரிபானது கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.30,877 பேருக்கு PCR மூலமும் 61,387 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 37,169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  25  பேர்  மரணமடைந்தனர். 20,326 பேருக்கு PCR மூலமும் 37,169 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,100 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT பிராந்தியத்தில் புதிதாக 550 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT பிராந்தியத்தில் புதிதாக 1020 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 14,914 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  6 பேர் மரணமடைந்தனர். 556 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.  10 பேர் ventilator-களில் உள்ளனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 13 January 2022 1:11pm
Updated 13 January 2022 1:22pm


Share this with family and friends