- சிட்னி பெரு நகரில் தற்காலிக வீசாவில் இருப்போருக்கு மானியம் வழங்குகிறது Red Cross
- விக்டோரிய மாநிலத்தில் ஆண்டு 12 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது
- கன்பராவில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலதிக Covid சோதனை மற்றும் தடுப்பூசி போடும் வசதிகள்
- குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,220 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் எட்டுப் பேர் இறந்துள்ளார்கள்.
தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையின் ஏழு நாள் சராசரி செப்டம்பர் மாதத்தில் 1,500 என்ற நிலையில், பூர்வீக குடி பின்னணி கொண்டவர்கள் விரைவில் தடுப்பூசிகளைப் போடுமாறு, St Vincent's மருத்துவமனையின் Aunty Pauline Deweerd, பூர்வீக குடி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
என்ற திட்டத்தின் கீழ், முடக்கநிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட, தற்காலிக வீசாவில் அல்லது வீசா இல்லாமல் தற்போது இங்கு வாழ்பவர்களுக்கு, ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் (Australian Red Cross), $400 மானியத்தை (ஒரு முறை) வழங்குகிறது
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 246 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தற்போது தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,786 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டு 12 பரீட்சை விரைவில் நடக்கும் என்பதால், ஆண்டு 12 மாணவர்கள், ஆசிரியர்கள், பரீட்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், நேற்று திங்கள் கிழமை செப்டம்பர் 6ஆம் தேதி முதல் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 6 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
கன்பராவில், AstraZeneca தடுப்பூசியின் முதற் சுற்றைப் போட்டுள்ளவர்கள் நான்கு வார இடைவெளியின் பின் இரண்டாவது சுற்றைப் பெறலாம். MyDHR என்ற இணையத் தளத்தினூடாக அல்லது, காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தொலைபேசி மூலம் (02) 5124 7700 என்ற இலக்கத்தை அழைத்து அதற்கான முன் பதிவை செய்யலாம்.
Weston Creek Community Health Centre என்ற இடத்திற்கு ஊனமுற்றவர்களுக்கு சேவை வழங்கும் Access and Sensory Clinic என்ற சிகிச்சை மையத்தை இடம் மாற்றுவதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மேலதிக Covid சோதனை மற்றும் தடுப்பூசி போடும் வசதிகளை ACT அரசு வழங்குகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.