- விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் மட்டும் புதிதாக 42 கோவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகின.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் rapid antigen test (RAT) மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அதனை ServiceNSW app ஊடாக பதிவுசெய்ய வேண்டுமென்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறுபவர்களுக்கு $1000 அபராதம் விதிக்கப்படும். ஜனவரி 19 முதல் இது நடைமுறைக்குவருகிறது.
- NSW மாநிலத்தில் 21 இறப்புகள் பதிவானதுடன் மேலும் 34,759 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
- NSW மாநிலத்தில் பதிவாகும் தொற்றுக்களில் 90 சதவீதம் Omicron திரிபினால் ஏற்பட்டவை என தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கூறுகிறார்.
- விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 40,127 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 21 பேர் மரணமடைந்தனர்.
- விக்டோரிய மாநிலத்தில் 946 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 112 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 31 பேர் ventilator-களில் உள்ளனர்.
- குயின்ஸ்லாந்தில் 525 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- வேகமாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, விநியோகச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளதையடுத்து, வணிகத் துறைகளுக்கான தனிமைப்படுத்தும் விதிகளை தளர்த்துவது குறித்த அவசர கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
- முதன்மை தடுப்பூசிகளையே booster தடுப்பூசிகளாக தொடர்ந்து வழங்குவது புதிய திரிபுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான தீர்வு அல்லவெனத் தெரிவித்துள்ள WHO வல்லுநர்கள், கோவிட் திரிபுகளிலிருந்து சிறந்த முறையில் பாதுகாக்கும் புதிய தடுப்பூசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
- Omicron திரிபானது அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களை பாதிக்கக்கூடும் என WHO-இன் ஐரோப்பா நிர்வாகி Hans Kluge கூறுகிறார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 34,759 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்படவில்லை.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 40,127 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர். 18,434 Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,583 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 22,069 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 3,985 Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.