சர்வதேச மாணவர்கள் விரைவில் NSW மாநிலம் திரும்பலாம், விக்டோரிய மாநிலத்தில் முன்பதிவின்றி Moderna தடுப்பூசி

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Victorian Police officers patrol through Bourke Street Mall ahead of a planned rally against mandatory Covid-19 vaccinations in Melbourne, Friday, September 24, 2021. (AAP Image/James Ross) NO ARCHIVING

Victorian Police officers patrol through Bourke Street Mall ahead of a planned rally in Melbourne, Friday, September 24, 2021. Source: AAP/James Ross

  • NSW மாநிலத்தில் வாழும் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் மூவரில் ஒருவர் முதல் சுற்று தடுப்பூசி போட்டு விட்டார்கள்
  • விக்டோரிய மாநிலத்தில் மேலதிக Moderna தடுப்பூசி
  • ACTயில் ஏழாவது வாரமாக முடக்கநிலை
  • நாட்டில் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் பாதிப் பேர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,043 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பதினொரு பேர் இறந்துள்ளார்கள்.

Pfizer, Moderna அல்லது AstraZeneca முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ள சர்வதேச மாணவர்கள் 500 பேர் மாநிலத்திற்கு வந்து கல்வியைத் தொடர்வதான ஒரு பரீட்சார்த்த திட்டத்தை NSW மாநில அரசு முன்னெடுக்கிறது

NSW மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள Lightning Ridge, தெற்குப் பகுதியிலுள்ள Jindabyne மற்றும் Crookwell, வடக்குப் பகுதியிலுள்ள South Lismore ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 733 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றாளர்களில் 84 சதவீதமானவர்கள் 50 வயதிற்கும் குறைந்தவர்கள்.  தொற்றினால் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் மாநிலம் முழுவதும் 700ற்கும் மேற்பட்ட மருந்தகங்களில் மூன்று இலட்சம் Moderna தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், கூடுதலாக 32,000 தடுப்பூசிகள் Pop-up தடுப்பூசி தளங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் இவற்றை 12 முதல் 59 வயதுடைய எவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும் சுகாதார அமைச்சர் Martin Foley கூறினார்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

கன்பராவின் வடக்கில் உள்ள Calvary Haydon முதியோர் பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அவர் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTயில் தற்போது சுமார் 450 இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில்

  • டாஸ்மேனியா மாநிலத்தின், ‘வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருத்தல்’ சோதனை திட்டம் இன்று தொடங்குகிறது.  மாநிலம் வரும் பயணிகள் தொற்று இல்லை என்பதை சோதனை செய்து நிரூபிக்க வேண்டும், விமான நிலையத்திலிருந்து தனியார் போக்குவரத்து சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

COVID-19 myths
Source: SBS


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 24 September 2021 1:22pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends