தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பயணிகளுக்கு $5000 அபராதம்- NSW அறிவிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் முதலாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People wearing PPE arriving at Sydney International Airport in Sydney, Monday, November 29, 2021.

People arriving at Sydney International Airport in Sydney. Source: AAP

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்ட ஆறாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். 40 வயதுகளிலுள்ள இந்நபரும் கடந்த வியாழனன்று டோஹாவிலிருந்து சிட்னி வந்தடைந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். 
  • Omicron திரிபு எந்தளவு ஆபத்தானது என்பது பற்றிய போதுமான தகவல்களைப் பெறுவதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்று தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly கூறுகிறார்.
  • நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளும் 72 மணித்தியாலங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அதேநேரம் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் மீண்டும் இரண்டாவது கோவிட் சோதனையை   NSW மாநிலத்திற்குள் வந்தவர்கள் ஆறாவது நாளிலும், விக்டோரியாவிற்குள் வந்தவர்கள் 5-7 நாட்களுக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும்.
  • எட்டு தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று ஒன்பது தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து விக்டோரியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • தனிமைப்படுத்தல் அல்லது கோவிட் சோதனை தொடர்பான கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறுபவர்களுக்கான அபராதத்தை NSW மாநிலம் $1000லிருந்து $5000 ஆக உயர்த்தியுள்ளது. கோவிட் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கான அபராதம் $10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,179 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 6  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 251 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 1 December 2021 2:02pm
Updated 1 December 2021 2:10pm


Share this with family and friends