- NSW மாநில சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தலுக்கு உட்படும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 14 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்குப் பிறகு வேலைக்குத் திரும்ப முடியும்.
- கோவிட் சோதனை தொடர்பில் சிட்னியில் உள்ள St Vincent's மருத்துவமனை இரு பாரிய தவறுகளை கடந்த நாட்களில் இழைத்துள்ளது. திங்களன்று கிட்டத்தட்ட 1,000 பேருக்கான கோவிட் சோதனை முடிவு வருவதற்கு முன்னரே அவர்களுக்கு தொற்று இல்லை என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- குயின்ஸ்லாந்திற்கு பயணம் செய்பவர்கள் PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதன் காரணமாக, NSW மாநிலத்தில் PCR சோதனைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சுகாதாரத்துறை மீதான பணிச்சுமையும் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்துள்ளார்.
- வேறு மாநிலங்களிலிருந்து குயின்ஸ்லாந்து வந்தவர்கள் ஐந்தாவது நாள் மேற்கொள்ள வேண்டிய PCR சோதனை நடைமுறையை ரத்து செய்வதாக மாநில சுகாதார அமைச்சர் Yvette D’Ath அறிவித்தார்.
- நேற்றையதினம் ஆஸ்திரேலியா முழுவதும் ஒரே நாளில் 10,000 க்கு மேற்பட்ட கோவிட் தொற்றாளர்ககள் இனங்காணப்பட்டனர்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,738 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
New South Wales மாநிலத்தில் புதிதாக 6,062 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,158 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.