விக்டோரியாவில் 200ஆவது நாள் முடக்க நிலை, NSW கட்டுப்பாடுகள் தொடரும்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

testing cue outside Palais Theatre

People are seen waiting in line outside of the Palais Theatre at a pop-up testing facility in St Kilda, Melbourne, Thursday, August 19, 2021. Source: AAP Image/James Ross

  • NSW மாநிலத்தின் பிராந்திய பகுதிகளில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது
  • விக்டோரியா மாநிலத்தில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, மாநிலத்தில் முடக்க நிலை பேணப்பட்ட 200ஆவது நாள் இன்று
  • ACTயில் ஒன்பது பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னமும் தெரியாது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் NT பிராந்தியத்திலும் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 681 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 87 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.  வயது எண்பதுகளிலுள்ள ஒருவர் தொற்றினால் இறந்துள்ளதைத் தொடர்ந்து கோவிட் டெல்டா தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலிருந்து மாநிலத்தில் இதுவரை 61 பேர் தொற்றினால் இறந்துள்ளார்கள்.

Merrylands, Guilford, Auburn, Granville, Lidcombe, Greenacre மற்றும் Blacktown புறநகர்ப் பகுதிகளில் தொற்று அதிகமாகப் பரவுகிறது என்று Premier Gladys Berejiklian எச்சரித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 82 பேரில், 71 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

என்ற தரவுகளை காணலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 57 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் மூன்று பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  அத்துடன், தொற்றுள்ளவர்களில் 13 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

Victoria மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Shepperton மற்றும் மெல்பன் புறநகர் Ardeer பகுதிகளில் கழிவு நீரை மீண்டும் மீண்டும் சோதனை செய்ததில் அந்த இடங்களில் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில துணை தலைமை சுகாதார அதிகாரி Ben Cowie கூறினார்.

என்ற தரவுகளை காணலாம்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  கன்பராவில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது.

கன்பராவில் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் light rail மற்றும் பேருந்து வழியாகப் பயணித்துள்ளார்கள்.  அத்துடன், Turner என்ற இடத்திலுள்ள குழந்தைகள் கற்றல் மையம் மற்றும் Belconnen என்ற இடத்திலுள்ள மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவையும் என்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீங்கள் யுள்ளவரா என்று காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • டார்வின் பெரு நகர் பிரதேசத்தில் முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ளது.  சில கட்டுப்பாடுகள் இன்னமும் நடைமுறையில் உள்ளன.
  • Katherineஇல் நடைமுறைப்படுத்தப் பட்ட முடக்க நிலை ஆகஸ்ட் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நண்பகல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • NSW-குயின்ஸ்லாந்து மாநில எல்லையைக் கண்காணிக்க ஆஸ்திரேலியப் படையினரைப் பணிக்கமர்த்த குயின்ஸ்லாந்து மாநில Premier Annastacia Palaszczuk கோரிக்கை விடுத்துள்ளார்.
alc covid mental health
Source: ALC


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 19 August 2021 2:55pm
Updated 12 August 2022 2:59pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends