NSW மாநிலத்தில் மேலும் 105 பேருக்கு தொற்று, ஒருவர் பலி!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 105 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Victorian health authorities have locked down the Isola apartment building in Richmond

The exterior of the Isola apartment block is seen in Richmond, Melbourne, Sunday, July 18, 2021. Source: AAP/James Ross

Highlights
  • செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:sbs.com.au/coronavirus
  • ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
  • கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: COVID-19 vaccine in your language.
சிட்னியின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 105 பேரில் 66 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 39 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

இவர்களில் ஆகக்குறைந்தது 34 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி Fairfield, Canterbury-Bankstown மற்றும் Liverpool ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் சுகாதாரத்துறை மற்றும் அவசர சேவைகள் பிரிவு உட்பட அத்தியாவசிய தொழில்துறை பணியாளர்கள் என அனுமதிக்கப்பட்டவர்கள்  தவிர வேறு எவரும் அப்பகுதிகளிலிருந்து வெளியே செல்லமுடியாது.

இதுதவிர திங்கட்கிழமை நள்ளிரவு முதல் சிட்னியின் அனைத்து கட்டுமான பணிகளும் இடைநிறுத்தப்படும். வீடுமனைகளுக்கான அவசரமற்ற திருத்தவேலைகள் மற்றும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகவே இருப்பதால் மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.

நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருப்பதாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை பூச்சியமாக அல்லது அதற்கு அண்மையாக இருக்கும்போது மட்டுமே முடக்கநிலையை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் Gladys Berejiklian தெரிவித்தார்.

அதேநேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நால்வருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 66,671 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் Premier Gladys Berejiklian வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

விக்டோரியா மாநில கோவிட் நிலைமை தொடர்பான பிந்திய தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை பார்வையிடுங்கள்:
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு  என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 18 July 2021 2:23pm
Updated 18 July 2021 2:28pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends