- விக்டோரிய மாநிலத்தில் புதிய தொற்றாளர்களில் 45 சதவீதமானவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள்
- NSW மாநிலத்தின் Lismore பகுதியில் இன்று முதல் ஏழு நாள் முடக்கநிலை
- ACTயில் வாழும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 93 சதவீதத்தினர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,377 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.
Mildura பகுதி கழிவு நீரில் Covid-19 கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும், Morwell மற்றும் Shepparton பகுதி உட்பட பல பிராந்திய இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
மெல்பன் நகரில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் ஆறு முறை நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன. ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவெனஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர மக்கள் தான் இது நாள் வரை மிக அதிகமான நாட்கள் வீடுகளில் முடங்கியிருந்தார்கள் என்ற பெருமை கொண்டுள்ளது. மொத்தம் 246 நாட்கள் முடக்க நிலையை அனுபவித்த மெல்பன் மக்கள் இப்பொழுது அந்தப் பெருமைக்குள்ளவர்கள் ஆகிறார்கள்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 623 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.
‘வீட்டிலேயே தங்கியிருங்கள்’ என்ற கட்டளை Lismore உள்ளூராட்சிப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதிக்குப் பின்னர் அந்தப் பகுதிக்கு சென்றவர் அனைவரும், அக்டோபர் 11ஆம் தேதி வரை வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
மாநிலத்தில் வாழ்பவர்களில் 16 வயதிற்கும் மேற்பட்டோரில் 67 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 28 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள்.
தொற்றாளர்கள் 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், இவர்களில் ஐவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவருக்கு சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.
ACTயில் தடுப்பூசி போட தகுதியானவர்களில் 93 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் இவர் பத்து நாட்கள் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து, மேலும் பல இடங்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.