- New South Wales மாநில பிராந்திய இடங்களில் முடக்கநிலை செப்டம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு
- 25,000 ஃபைசர் தடுப்பூசி பெறுகிறது விக்டோரியா மாநிலம்
- ACTயில் பாதிக்கப்பட்ட தொழில் உரிமையாளர்களுக்கு நிவாரணம்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிய தனிமைப்படுத்தல் விடுதி அமைக்கப்படுகிறது
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,029 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 37 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர். தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளார்கள்
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நடைமுறையில் வரும் என Premier Gladys Berejiklian அறிவித்தார்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள உள்ளூராட்சிப் பகுதிகளுக்கு வெளியே வாழ்பவர்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள், மற்றவர்களை சந்திக்கலாம். அப்படி சந்திக்கும் போது ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூட முடியாது.
களில் வசிப்பவர்களும் வெளி இடங்களில் மற்றவர்களை சந்திக்கலாம், ஆனால் அவர்கள் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள், ஊரடங்கு மற்றும் உடற்பயிற்சி விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 41 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர்.
40 வயதிற்கும் குறைவானவர்கள் AstraZeneca தடுப்பூசி போடுவதற்குப் பதிந்திருந்தாலும், ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலதிகமாக 25,000 ஃபைசர் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் இது சாதியமாகிறது என்று COVID Commander Jeroen Weimar கூறினார்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 14 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தமாகத் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 190ஆக உயர்ந்துள்ளது.
கன்பராவில் அறிமுகமாகியுள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் தகுதியடைகிறார்கள். வணிக நிறுவனங்களுக்கு 10,000 டொலர் வரையிலும், தனி நபர்கள் நடத்தும் வியாபாரங்களுக்கு 4,000 டொலர் வரையிலும் ப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Toowoomba நகருக்கு அருகிலுள்ள Wellcamp விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் விடுதி ஒன்று புதிதாக அமைக்கப்படுகிறது.
NT பிராந்தியத்தில் 12 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.