- NSW மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள Oberon பகுதியில் வாழ்பவர்கள் Covid சோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்
- விக்டோரிய மாநிலத்தின் Ballarat பகுதியில் முடக்கநிலை முடிவுக்கு வருகிறது
- ACTயில் தடுப்பூசி போடும் இலக்கு விரைவில் எட்டப்படும்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் முன் பதிவு செய்யாமல் பல இடங்களில் தடுப்பூசி போடலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள்.
மாநிலத்திலுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை Service NSW App செயலி வழியாக மக்களுக்கு வழங்குவது குறித்த பரீட்சார்த்த சோதனைகளில் நூற்றுக்கணக்கான NSW பிராந்திய மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மாநிலத்திலுள்ளவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டதும், இந்த செயலி முறை மாநிலம் முழுவதும் அறிமுகமாகும்.
NSW மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள Oberon பகுதியில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 628 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 57 சதவீதமானோர் மெல்பன் நகரின் வடக்கு பகுதியிலுள்ள புறநகர்களில் வாழ்பவர்கள். தொற்றினால் மூன்று பேர் இறந்துள்ளார்.
நோய்த்தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக விக்டோரிய மாநிலத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகள், சில கத்தோலிக்க மற்றும் தனியார் பாடசாலைகளில் 51,000 காற்று சுத்திகரிப்பு சாதனங்களைப் பொருத்த 190 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது. காற்றோட்ட கருவிகளுக்காக நாட்டில் செலவிடப்படும் மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
Ballarat பகுதியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவுடன் முடிவடையும், ஆனால் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முககவசங்கள் அணிய வேண்டியது உட்பட சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 17 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் 11 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
ACTயில் 95 சதவீதமானவர்கள் முதல் சுற்று தடுப்பூசி போடும் இலக்கை விரைவில் தாண்டவுள்ளது. தடுப்பூசி பெற தகுதியுள்ள மக்கள் தொகையில் 81 சதவீதம் பேர் ஒரு சுற்று தடுப்பூசியையும் 56 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் தற்போது போட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில்
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், Boondall, Caboolture, Doomben, மற்றும் Kippa-Ring ஆகிய இடங்களில் செப்டம்பர் 22 முதல் தடுப்பூசி போடலாம்.

Source: ALC
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.