- New South Wales மாநில HSC தேர்வுகள் நவம்பர் 9ஆம் தேதி வரை பிற்போடப்பட்டுள்ளன
- விக்டோரிய மாநிலத்தில் தொற்றுள்ளவர்களில் 10 சதவீதத்தினர் Shepparton பிராந்தியத்தில் வாழ்பவர்கள்
- ACTயில் கட்டுப்பாடுகள் மாற்றப் படுகின்றன
- 12 முதல் 15 வயதானவர்களும் ஃபைசர் தடுப்பூசி போட அனுமதி வழங்கியது ATAGI
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 882 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 60 வயதுகளில் மற்றவர் 90 வயதுகளில் – இருவரும் ஆண்கள்.
பாடசாலை மாணவர்கள் எப்போது பாடசாலை திரும்புவார்கள் என்ற கால அட்டவணையை Premier Gladys Berejiklian அறிவித்தார்.
- மழலையர் பள்ளி மற்றும் ஆண்டு 1 மாணவர்கள் – அக்டோபர் 25
- ஆண்டு 2, 6 மற்றும் 11 மாணவர்கள் – நவம்பர் 1
- ஆண்டு 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 மாணவர்கள் – நவம்பர் 8
பாடசாலைகளில் பணியாற்றுபவர்கள் அனைவரும் நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு, அவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்படும்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 79 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 53 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும், மற்றைய 26 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடக்கிறது.
65,000 மக்கள்தொகை கொண்ட Shepparton பிராந்தியத்தில் வாழ்பவர்களில் சுமார் 16,000 பேர் சுய-தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது, ஊழியர்கள் பற்றாக்குறையால் உணவு விநியோகம் செய்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 21 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தமாகத் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 221ஆக உயர்ந்துள்ளது.
களில் இன்றிரவு 11:59 முதல் மாற்றங்களை ACT அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
- குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல், மேலும் தளர்த்தப்படுகின்றன.
- 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களும் ஃபைசர் தடுப்பூசி போடலாம் என்று, நோய்த்தடுப்பு குறித்து சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் ATAGI அங்கீகரித்துள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.