- NSW மாநிலத்தில் நாளை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்கின்றன
- விக்டோரிய மாநிலத்தில் மேலதிகமாக 7,000 ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படுகிறது
- ACTயில் 15 பேருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஒருவருக்கும் தொற்று இல்லை.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,262 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. களுக்கு வெளியே வாழ்பவர்கள் ஐந்து பேர் வெளி இடங்களில் கூட முடியும். அந்தப் பகுதிகளில், ஒரே வீட்டில் வாழ்பவர்கள் இரண்டு மணி நேரம் வெளி இடங்களுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்வதற்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
NSW மாநிலத்தின் சர்வதேச எல்லைகளை கிறிஸ்மஸ் விடுமுறை காலத்திற்கு முன் திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக Premier Gladys Berejiklian அறிவித்தார். மாநிலத்தில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 78 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும், சுமார் 46 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டிருக்கிறார்கள் என்பதால், இது சாத்தியம் என்று அவர் கூறினார்.
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 392 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அரசின் தடுப்பூசி வழங்கும் மையங்களில் மேலதிகமாக 7,000 ஃபைசர் தடுப்பூசிகள் அடுத்து வரும் வாரங்களில் கிடைக்கும் என்று Premier Daniel Andrews கூறினார்.
விக்டோரியா மாநிலத்திலுள்ள எட்டு பாடசாலைகளிலும், Thornbury என்ற இடத்திலுள்ள Greek Orthodox தேவாலயம், Mill Park என்ற இடத்திலுள்ள இந்து கோயில், Newport என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் உட்பட Hume, Dandenong மற்றும் Casey உள்ளூராட்சிப் பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் திறக்கப்படுகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில்
- வயது 12ற்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள Moderna COVID-19 தடுப்பூசியை மேலதிகமாக பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) பேர் போட்டுக் கொள்ளலாம் என்று Scott Morrison பிரதமர் அறிவித்தார்.

Source: ALC
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.