மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ள NSW தொற்று.... பிராந்திய விக்டோரியாவில் தொற்று வேகமாகப் பரவுகிறது

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Watu wafanya mazoezi mjini Sydney, Jumapili, 22 Agosti, 2021

Watu wafanya ma.zoezi mjini Sydney, Jumapili, 22 Agosti, 2021. Source: AAP Image/Bianca De Marchi

  • New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 830 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் மூன்று பேர் இறந்துள்ளார்கள். 
  • விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 65 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது, அதில் 21 பேருக்கு ஏற்பட்ட தொற்று Shepparton இலிருந்து பரவியுள்ளது
  • ACTயில் புதிதாக 19 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இன்றைய நாளும் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 830 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இதுவரை பதியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும். 

தொற்று ஏற்பட்டு மூன்று பேர் இறந்துள்ளார்கள்.  இறந்தவர்களில் இருவர் ஆண்கள், இருவரும் தடுப்பூசியின் முதல் சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள், ஒருவர் 60 வயது நிரம்பியவர், மற்றவர் வயது எழுபதுகளில்.  மூன்றாமவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வயது எண்பதுகளில் உள்ள பெண், இவர் தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.  தொற்றினால் NSW மாநிலத்தில் இறந்தவர்கள் தொகை 71 ஆக உயர்கிறது.

தொற்றுள்ளவர்களில் 550 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதில் 94 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த சில நாட்கள் அதிகப்படியானவர்கள் தடுப்பூசி போட பதிந்துள்ளார்கள் என்று மாநில சுகாதார அமைச்சர் Brad Hazzard அறிவித்தார்.

என்ற தரவுகளை காணலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 65 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் 55 பேருக்கு ஏற்பட்ட தொற்று எங்கே ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது, 10 பேருக்கு எங்கே தொற்று ஏற்பட்டது என்பது விசாரிக்கப்படுகிறது.

புதிதாக தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

தொற்றுள்ளவர்கள் என்று இன்று பதிவாகியவர்களில் 21 பேருக்கு ஏற்பட்ட தொற்று Shepparton இலிருந்து பரவியுள்ளது.

விக்டோரிய மாநிலம் முழுவதும் முடக்க நிலை நடைமுறையில் உள்ளது.

முடக்க நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் மெல்பன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  இதன் போது ஆறு காவல்துறையினர் காயமடைந்துள்ளார்கள்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  6 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.  ANU மாணவர் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது, ஆனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.  தற்போது மாநிலத்தில் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 39.

Self-Isolation can impact our mental health and wellbeing.
Source: ALC


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 22 August 2021 2:19pm
Updated 12 August 2022 2:59pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends