Northern Territory-இல் மேலும் மூவருக்கு கோவிட் தொற்று! முடக்கநிலை நீட்டிப்பு!!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 23ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Kiongozi wa Wilaya ya Kaskazini Michael Gunner azungumza na waandishi wa habari katika bunge la NT mjini Darwin

Kiongozi wa Wilaya ya Kaskazini Michael Gunner, azungumza na waandishi wa habari katika bunge la NT mjini Darwin. Source: AAP Image/Aaron Bunch

  • Northern Territory-இல் சமூகப் பரவல் மூலம் குழந்தையொன்று உட்பட புதிதாக மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, Katherine பகுதி, டிசம்பர் 4ம் திகதிவரை தீவிர கட்டுப்பாடுகளின்கீழோ அல்லது  முடக்கநிலையிலோ இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 
  • குயின்ஸ்லாந்து 90 சதவீத கோவிட் தடுப்பூசி இலக்கை அடையும் வரை, சிட்னிக்கான பயணங்கள் 'கேள்விக்கு அப்பாற்பட்டவை' என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
  • உள்நாட்டு பயணிகளுக்கான கோவிட் சோதனை முறையை மாற்றியமைக்குமாறு NSW அழைப்பு விடுத்துள்ளது.
  • NSW, ACT மற்றும் விக்டோரியாவைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடின்றி பயணிக்க ஏதுவாக தெற்கு ஆஸ்திரேலியா இன்றுமுதல் தனது எல்லைகளைத் திறந்துள்ளது.  தெற்கு ஆஸ்திரேலியா செல்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் 43,000 பயணிகள்  இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
  • ஆனால் 80 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசி விகிதம் மற்றும் சமூகப் பரவல் உள்ள உள்ளூராட்சிப் பகுதிகளிலிருந்து பயணிக்கும் மக்கள், தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 827 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 17 பேர் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 173 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 23 November 2021 2:02pm
Updated 23 November 2021 2:10pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends